முல்லை பெரியாறு அணை விவகாரம் – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

முல்லை பெரியாறு அணை விவகாரம் – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.

முல்லை பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதா? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாடுகள் என்ன என்றும் கேள்வி எழுப்பி, அணைகள் என்னென்ன அதிகாரங்களுடன் செயல்படும் என எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரியாறு ஆற்றில் 1895-ம் ஆண்டு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சனைகள் குறித்த மனுக்கள் மீதான வாதங்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதன்படி,  முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் சில பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்ததையடுத்து, முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கை மார்ச் 31-ம் தேதி இன்று விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

126 ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையின் கட்டமைப்புப் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை, கண்காணிப்புக் குழு மூலம் தீர்க்கலாம் என்று தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு மார்ச் 24-ம் தேதி உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube