தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி வரலாறு படைக்கும் என்று அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி வரலாறு படைக்கும் என்று அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் முக்கியமான கட்சியாக மக்கள் நீதி மய்யத்தை பார்க்கின்றனர் என்றும் கூறியுள்ளார். இதனிடையே, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் சார்பாக தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.