விருதுநகர் 28-வது வார்டில் மக்களின் குறைகள்..!

விருதுநகர் 28-வது வார்டில் குடிநீர் பிரச்னை உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

விருதுநகர் 28-வது வார்டில் டி.சி.கே பெரியசாமி தெரு, சோனை கருப்பன் தெரு, வாடியான் தெரு, சின்னையாபள்ளிக்கூட தெரு, பெரிய காளியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட தெருக்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் நீர் வசதி இல்லாததால் பக்கத்து தெருக்களுக்கு செல்கின்றனர். சாக்கடைகள் குறுகலாகவும், ஆழப்படுத்தாமலும் உள்ளது. இப்பகுதி மக்களுக்கு நுாலகம், சிறுவர் பூங்கா தேவையாக உள்ளது. பாதாளசாக்கடை தொட்டி மூடிகள் தரமின்றி உள்ளதால்  உடைக்கின்றன.

சாக்கடையை சுத்தம் செய்து பல ஆண்டுகளாகிறது. நேரடியாக பாதாளசாக்கடை குழாய்களை அறுத்து விடுவதால் நோய் அச்சம் ஏற்படுத்துகிறது. தெருவிளக்கு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். பாதாளசாக்கடைக்காக தோண்டப்பட்ட குழி சீரமைக்கப்படவே இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர் என கூறுகின்றனர்.

சுகாதாரத்திற்கும், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பர்வர்களுக்கு தங்கள் வாக்களிக்க உள்ளது அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

 

author avatar
Castro Murugan