மக்களை சந்திக்கவே மக்கள் ஆசீர்வாத யாத்திரை – இணை அமைச்சர் எல்.முருகன்

மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றபின் மக்களை சந்திக்க தமிழகத்தில் யாத்திரை செய்கிறேன் என்று எல் முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குச் சென்றடையச் செய்யும் நோக்கில் ‘மக்கள் ஆசீர்வாத யாத்திரை’ எனும் சுற்றுப் பயணத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று கோவையில் தொடங்கியுள்ளார். இந்த யாத்திரை வரும் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது என கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றபின் மக்களை சந்திக்க தமிழகத்தில் யாத்திரை செய்கிறேன். நாடு முழுவதும் மக்கள் ஆசீர்வாத யாத்திரை நடைபெறுகிறது. கொரோனா விதிகளை பின்பற்றியே நிகழ்ச்சிகள் நடத்துகிறோம்.

கொங்குநாடு என்பது மக்கள் முடிவு செய்ய வேண்டியது. மத்திய அமைச்சர்களை அறிமுகம் செய்துவைக்கக்கூடிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இடமளிக்கவில்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது முதன்முறையல்ல, ஏற்கனவே பல கோயில்களில் இருக்கின்றனர். மேலும், சர்வதேச நிலவரத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்