புகழ்பெற்ற பாடகரின் ஆன்மா சாந்தியடையட்டும் – சல்மான், ஷாருக் இரங்கல்.!

எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவிற்கு பாலிவுட் நடிகர்களான சல்மான் மற்றும் ஷாருக்கான் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், எஸ்.பி.பி அவர்களின் மறைவு செய்தியை கேட்டு என் இதையம் உடைந்தது. உங்களின் இசையால் நீங்கள் எப்போதும் வாழ்வீரகள். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுபோன்று நடிகர் ஷாருக்கான், எஸ்.பி.பி  அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். புகழ்பெற்ற பாடகரின் ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் அவரது இனிமையான குரலை இழக்க நேரிடும் எனவும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்