தரவரிசை அடிப்படையில் பி.இ கலந்தாய்வு இன்று ஆன்லைனில் துவக்கம்!

தரவரிசை அடிப்படையில் பி.இ கலந்தாய்வு இன்று ஆன்லைனில் துவங்குகிறது.

பிஇ தேர்வுக்காக இதுவரை 1.10 லட்சம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைனில் துவங்குகிறது. மொத்தமாக விண்ணப்பித்துள்ள 1.10 லட்சம் மாணவர்களை 4 குழுவாக பிரித்து தர வரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 12,263 முதல் குழுவை சேர்ந்த மாணவர்களுக்கு இன்று ஆன்லைனில் கலந்தாய்வு துவங்குகிறது. விருப்ப கல்லூரியை உறுதிப்படுத்துவதற்கு இரண்டு நாள் அவகாசமும் கட்டணம் செலுத்துவதற்கு நான்கு நாள் அவகாசம் கொடுத்து அக்டோபர் 28ஆம் தேதி வரையிலும் இந்த கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal