#IPL2022: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த பஞ்சாப்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 64-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 64-வது போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள DY பட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

விளையாடும் வீரர்கள்:

டெல்லி கேபிட்டல்ஸ்:

டேவிட் வார்னர், சர்ஃபராஸ் கான், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மேன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது.

பஞ்சாப் கிங்ஸ்:

ஜானி பேர்ஸ்டோவ், ஷிகர் தவான், பானுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டோன், மயங்க் அகர்வால் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்பிரீத் ப்ரார், ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

Leave a Comment