பண்டிகை காலங்களில் தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – பிரதமர் மோடி

பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியது முதல், தற்பொழுது வரை ஏழாவது முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து காணொலி மூலமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தமாக கழுவது, போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் அனைவருக்கும் பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதுமட்டுமன்றி, நோய், நெருப்பு போன்றவற்றை நாம் எளிதாகக் கருதக் கூடாது எனக் கூறிய பிரதமர் மோடி, பண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில்  கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.