இலங்கையில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல்!

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், இன்று இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான 16-வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே இந்த தேர்தல், ஏப்ரல் 25 மற்றும் ஜூன் 20 ஆகிய தேதிகளில் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு தேர்தலிலும், சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி இடையேதான் போட்டி இருந்தது. ஆனால் இம்முறை சுதந்திரக் கட்சி உடைந்த போதும் மகிந்த ராஜபக்சேவின் பொதுஜன பெரமுனவின் கீழ் ஓரணியாக உள்ளது.

இந்நிலையில், இலங்கை தேத்தல் ஆணையம், கொரோனா காரணமாக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் பின்பற்ற வேண்டிய பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.