இதற்கு பாண்டியாதான் கேப்டன்..புதிய அணியை அறிவித்தது பிசிசிஐ!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்களை அறிவித்தது பிசிசிஐ.

தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த டி20 தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்த நிலையில், தென்னாபிரிக்கா அணி 2 போட்டியிலும், இந்தியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணிக்கு ரிஷப் பந்த் கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த புதிய தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி ஆகியோர் புதிதாக இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி : ஹர்திக் பாண்டியா (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (WK), யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஆர் பிஷ்னோய், ஹர்ஷல் படேல் , அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment