#T20 World Cup 2022: இந்தியா-பாக் போட்டியன்று மெல்போர்னில் மழை வருமா? வானிலை மையம் என்ன சொல்கிறது.!

டி-20 உலகக்கோப்பையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டியன்று மழை வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சூப்பர்-12 போட்டிகள் அக்-22 முதல் தொடங்குகிறது. சூப்பர்-12 இன் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியா, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து அக்-23 அன்று மெல்போர்னில் விளையாடுகிறது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்த … Read more

ஒரே ஒவரில் ஷமி, 3 விக்கெட்கள்! 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி.!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தகுதி சுற்று போட்டிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர்-12 க்கு தகுதி பெறுகின்றன. இந்த போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா பயிற்சி 2 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா தனது முதல் பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இன்று … Read more

இது தான் இந்தியாவின் சிறந்த பேட்டிங் வரிசை, உலகக்கோப்பை நமக்கு தான் – ரவி சாஸ்திரி

இதுவரை டி-20 போட்டிகளில் இந்தியாவிற்கு இது போன்ற பேட்டிங் வரிசை அமைந்ததில்லை என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். டி-20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, டி-20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. தற்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலிமையடைந்துள்ளது. சூரியகுமார் யாதவ் தொடர்ந்து சிறப்பாக விளையாடிவருகிறார், … Read more

ஷாஹீன் அபிரிடிக்கு எதிராக பயப்படாமல் அதிரடியாக விளையாடுங்கள் – கம்பிர்

பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடிக்கு பயப்படாமல் துணிந்து விளையாடுங்கள் என்று கம்பிர், இந்திய வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். டி-20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து அக்-23 இல் விளையாடுகிறது, இதற்கு முன்னதாக இந்திய பேட்டர்களுக்கு, முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் கவுதம் கம்பிர் அறிவுரை கூறியுள்ளார். இந்தியா, உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ளது. ரோஹித் … Read more

காயம் காரணமாக மற்றொரு இந்திய வீரர் டி-20 உலகக்கோப்பையிலிருந்து விலகல்!.

டி-20 உலகக்கோப்பை தொடரிலிருந்து தீபக் சஹர் காயம் காரணமாக விலகியுள்ளார். அக்-16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் டி-20 உலகக்கோப்பை திருவிழா தொடங்கவிருக்கிறது. இதற்காக இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதற்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த தீபக் சஹர் காயம் காரணமாக தற்போது விலகியுள்ளார். ஏற்கனவே ஆசியக்கோப்பை தொடரில் காயம் காரணமாக விலகிய ரவீந்திர ஜடேஜா இன்னும் முழுமையாக குணமடையாததால் அவரும் டி-20 உலகக்கோப்பை தொடரில் இடம்பெறவில்லை. அதன் பின் இந்தியாவின் முக்கிய … Read more

99 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா, குல்தீப் யாதவ் அபார பந்துவீச்சு!!

இந்தியாவிற்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 99  ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் தென்னாபிரிக்க அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தொடர் 1-1 என்ற நிலையில் இன்று தொடரை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி டெல்லியில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில்பௌலிங் தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியால் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 99 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அந்த அணியில் க்ளாஸென் … Read more

டெல்லியில் ஈரமான அவுட்-பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் இறுதிப்போட்டியில் ஈரமான அவுட்- பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஏற்கனவே டி-20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஒருநாள் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இன்று தொடரை முடிவு செய்யும் 3ஆவது மற்றும் இறுதிப்போட்டி டெல்லியில் நடைபெறுகிறது. டெல்லியில் … Read more

தொடரை வெல்லுமா இந்தியா? டெல்லியில் இன்று இறுதிப்போட்டி!!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தென்னாப்பிரிக்கா 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஏற்கனவே டி-20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஒருநாள் தொடரில் முதல் போட்டி மழை காரணமாக 40 ஒவர்களாகக் குறைக்கப்பட்டு விளையாடப்பட்டது. இதில் தென்னாபிரிக்க அணி  9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் … Read more

டாஸ் வென்று இந்தியா பௌலிங் -மழை காரணமாக 40 ஓவர்களாக குறைப்பு

மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்தியா-தென்னாபிரிக்கா மோதும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பௌலிங் தேர்வு செய்திருக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென்னாபிரிக்க அணி மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ள நிலையில் ஒருநாள் போட்டித்தொடர் இன்று லக்னோவில் தொடங்குகிறது. இன்று 1:30 மணிக்கு தொடங்கவேண்டிய முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. … Read more

2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தான் எனது குறிக்கோள்- ஷிகர் தவான்

2023ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடர் தான் தற்பொழுது தன்னுடைய குறிக்கோள் என்று ஷிகர் தவான் கூறியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் தென்னாபிரிக்க அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஷிகர் தவான் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, தென்னாபிரிக்க அணியை எதிர்த்து இன்று விளையாடுகிறது. முதல் போட்டி இன்று லக்னோவில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக ஷிகர் தவான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடர் … Read more