சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு 200 பேருக்கு மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் ஈரோடு ஆட்சியர் அலுவலகம் நோக்கிசென்றதால் அவர்களை தடுக்க போலீசார் தடியடி நடத்தினர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம், வைராபாளையம், அசோகபுரம், பெரிய அக்ரஹாரம், சுண்ணாம்பு ஓடை, மரவாபாளையம், சடையம்பாளையம், ராசாம்பாளையம், வெட்டுக்காட்டுவலசு, கங்காபுரம் ஆகிய பகுதிகளை சுற்றி பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இங்கு வடமாநிலத்தவர்கள் பலர் வேலை செய்து வந்துள்ளனர். தற்போது ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் இயங்காததால், கடந்த 50 நாட்களுக்கு மேலாக வடமாநிலத்தவர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால், அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர்.
சுமார் 200 பேருக்கு மேல் திரண்டு வந்ததால், போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தி திரும்பி செல்ல அறிவுறுத்தப்பட்டனர். கூட்டம் கலையாததால் லேசான தடியடி நடத்தி போலீசார் அங்கிருந்த வடமாநிலத்தவர்கள் அப்புறப்படுத்தினர். பின்னர், அவர்களை தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அதன் பிறகு, தொழிற்சாலை உரிமையாளர்களை அழைத்து, தொழிற்சாலைகளில் வேலைபார்த்து வந்த தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, தங்குவதற்கு இருப்பிடம் ஆகியவை தயார் செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தினர். பேருந்து, ரயில் சேவை ஏற்பாடு செய்த பிறகு அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…