தொகுதியை விட்டு வெளி நபர்கள் வெளியேற வேண்டும்-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியை விட்டு வெளி நபர்கள் வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.  
தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவுபெறுகிறது. வெளி நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவித்தார். இன்றைக்குள் இரண்டு தொகுதிகளுக்கும் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்கும் பணி முடிவடையும் என்றும் தெரிவித்தார்.