இன்னும் சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாகும்: ஓபிஎஸ்

இன்னும் சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாகும் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் மீட்பு உரிமைக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது, ”அபகரிக்கப்பட்ட அதிமுகவை மீட்டு விரைவில் கோட்டையில் கொடி ஏற்றுவோம்.

இந்தியா கூட்டணி ஆண்டிகள் மடம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தான் வெற்றி பெறுவார் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியை நாசப்படுத்திவிட்டார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் சசிகலாவுடன் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டால் எளிதாக வெல்லலாம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா என்னிடமும், எடப்பாடி பழனிசாமியிடமும் கூறினார், அதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார்.

மக்களவை தேர்தல்! திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு

இன்னும் சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாகும், அவர் தானாக வெளியேறுவார் அல்லது வெளியேற்றப்படுவார், பிரிந்த சக்திகள் ஒன்று சேரவே கூடாது என நினைக்கும் ஒரே நபர் அவர் தான், சந்தர்ப்பம் வரும் போது சசிகலாவை சந்தித்து பேசிவேன்” என்றார்.

Leave a Comment