பள்ளிகள் திறப்பு : பகுதி பகுதியாக பள்ளிகளை திறக்க ஐசிஎம்ஆர் பரிந்துரை..!

பள்ளிகளை பகுதி பகுதியாக பள்ளிகளை திறக்க ஐசிஎம்ஆர் பரிந்துரை. 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வஐசிஎம்ஆர் ந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

இந்நிலையில், யுனெசுகோ வெளியிட்ட அறிக்கைபடி,  500 நாட்களுக்கு மேல் இந்தியாவில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், 32 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, படிப்படியாக ஆரம்ப பள்ளிகளை திறக்கலாம் அரசுக்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்துள்ளது.  மேலும், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • பள்ளிகள் திறப்புக்கு முன்பு மாநில-மாவட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
  • ஆசிரியர்கள், ஊழியர்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்.
  • முகக்கவசம் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது போன்ற கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
  • குழந்தைகளின் உணவு பரிமாற்றம் தவிர்க்கப்பட வேண்டும்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.