சைக்களுக்காக நடந்த இரண்டு ரூபாய் சண்டையில் ஒருவர் கொலை..!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வலசபாகலா கிராமத்தை சார்ந்தவர் சுவர்ணராஜ் (24) இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று முந்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு சைக்கிள் கடைக்கு சென்று தனது சைக்கிளுக்கு காற்று அடித்து உள்ளார்.
சைக்கிளுக்கு காற்று அடித்ததால் சைக்கிள் கடைக்காரர் சம்பா 2 ரூபாய் கேட்டு  உள்ளார். சுவர்ணராஜிடம் இரண்டு ரூபாய் இல்லாததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது சுவர்ணராஜ் , சம்பாவை அடித்து உள்ளார். இதை தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த சம்பா நண்பர் அப்பா ராவ் அருகில் இருந்த இரும்பு கம்பியால் சுவர்ணராஜ் தலையில் அடித்து உள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த சுவர்ணராஜை அருகில் இருந்தவர்கள் மருவத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர். ஆனால் சிகிக்சை பலனின்றி சுவர்ணராஜ் இறந்து உள்ளார். இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பாவை கைது செய்து உள்ளனர். தப்பியோடிய அப்பா ராவ்வை போலீசார் தேடி வருகின்றனர்.
வெறும் இரண்டு ரூபாய்க்காக ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

author avatar
murugan