ராஜஸ்தானின் ராஜ்சமந்தில் பேருந்து விபத்து – 3 பேர் பலி ; 24 பேர் காயம்!

ராஜஸ்தானிலுள்ள ராஜ்சமந்த் எனும் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்ததுள்ளது. அப்போது திடீரென்று பேருந்து பாறை ஒன்றின் மீது மோதியதில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24 பேர் காயமடைந்துள்ளனர். இந்தப் பேருந்து உதய்ப்பூரிலிருந்து ஜோத்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது தான் விபத்து ஏற்பட்டதாகவும், பேருந்து ஓட்டுநர் தூங்கிக்கொண்டிருந்த போது ஓட்டியதால், பாறை மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு … Read more

தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட 35 வயது நபர்!

உத்தர பிரதேச மாநிலம் காசிப்பூர் பகுதியில் உள்ள சதார் பஜார் எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 35 வயது நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளார். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி மகேந்திர யாதவ் கூறுகையில், தற்கொலை செய்து உயிரிழந்தவர் அவரது மனைவி ரீனா, 5 வயது குழந்தை மற்றும் 3 வயது குழந்தை ஆகிய மூவரையும் தலையணையால் நெரித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து … Read more

மனைவியின் 3 வயது மகளை அடித்துக்கொன்ற இரண்டாவது கணவர் கைது ..!

புனேயை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மூன்று வயது மகளை கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார். இவர் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்து, அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டதால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இருந்தாலும் தனது மூன்று வயது மகளை இரண்டாவது கணவருடன் சேர்ந்து வளர்த்து வந்துள்ளார். அந்த குழந்தையின் தலையை சுவரில் மோதி அப்பெண்ணின் இரண்டாவது கணவர் கொடூரமாக கொலை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக … Read more

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் 6 மாத குழந்தையை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்..!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவரின் கணவர் சாலை விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அந்த பெண் கணவர் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் தனது 6 மாத குழந்தையை சேலையை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின் தானும் அதே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நடந்த பொழுது அந்த பெண் அவரது சகோதரரின் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. கணவரின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் … Read more

கணவருடன் சண்டையிட்டு ஆத்திரத்தில் 3 மாத மகளை கழுத்தை நெரித்து கொன்ற தாய்…!

டெல்லியிலுள்ள ஹைதர்பூர் எனும் பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கு வீட்டுப் பிரச்சினை காரணமாக சண்டை எழுந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் அந்த பெண் தனது மூன்று மாத மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், இருவரும் சண்டையிட்டு பின்பு கணவர் வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டார். அதன் பின் அந்த பெண் தனது குழந்தையின் கழுத்தில் இருந்த நூலை வைத்து இறுக்கி குழந்தையை கொன்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவரை கொல்வது எப்படி எனும் புத்தகத்தை எழுதியவர் கணவரை கொன்ற வழக்கில் கைது…!

அமெரிக்காவை சேர்ந்த 71 வயதான நான்சி கிராம்ப்டன்-ப்ரோபி எனும் பெண்மணி ஒரு காலத்தில் சிறந்த காதல் கதைகள் எழுதும் எழுத்தாளராக இருந்துள்ளார். இவர் ஒரு கட்டத்தில் உங்கள் கணவரை எப்படி கொல்வது எனும் கட்டுரை ஒன்றையும் எழுதியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் இவர் தனது கணவரை சுட்டு கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது சக பணியாளர் ஒருவர் அவரது கணவரின் உடலை சமையலறையில் கண்டதாக கூறியுள்ளார். அவரது மார்பு மற்றும் முதுகுப் பகுதியில் துப்பாக்கி சூடு … Read more

வாங்கி கொடுத்த ஸ்மார்ட் போனை திரும்ப தர மறுத்த காதலி கொலை..!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பாகுர் எனும் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய இருபது வயது கொண்ட பெண் ஒருவர், அப்பகுதியிலேயே வசிக்கும் ஒரு நபரை இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் வெளியில் சுற்றுவது, வீட்டிற்கு வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. மேலும், அந்தப் பெண்ணிற்கு அவரது காதலன் ஒரு ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது காதலனுடன் கால்பந்து போட்டியை காண வெளியே சென்ற பெண், … Read more

“வென்டாஸின் நரமாமிசம்”;தாயை கொலை செய்து சாப்பிடவருக்கு 15 ஆண்டுகள் சிறை..!

ஸ்பெயினில் வசிக்கும் இளைஞர் ஒருவர்,தனது தாயை கொலை செய்து சாப்பிட்டதனால்,அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்பெயினின் வென்டாஸ் பகுதியில் வசிக்கும் ஆல்பெர்டோ சான்செஸ் கோமெஜ் என்பவர்,கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,தனது 69 வயதான தாயை கழுத்தை நெரித்து கொன்று,பின்னர் இரண்டு சமையலறை கத்திகளைப் பயன்படுத்தி தாயின் உடலை சிறிய துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளார். பின்னர்,ஆல்பெர்டோவின் தாயை காணவில்லை என்று அவரது தாயின் நண்பர் அளித்த புகாரை தொடர்ந்து,சந்தேகத்தின் பேரில் … Read more

வியட்நாம் கனமழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலி!

வியட்நாமில் பெய்துவரும் கனமழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய வியட்நாம் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 7 பேர் இன்னும் காணவில்லை, என்று இயற்கை பேரிடர் மையம் தெரிவித்துள்ளது. 900 ஹெக்டேர் நெல் … Read more

விலங்குகளுக்கு எதிராக கொலைவெறி தாக்குதல் நடத்தும் மனிதர்கள்! மட்டனில் வெடி வைத்து கொல்லப்பட்ட நரி!

மட்டனில் வெடி வைத்து கொல்லப்பட்ட நரி. விலங்குகளுக்கு எதிராக தொடரும் சித்திரவதைகள். கடந்த சில நாட்களாகவே விலங்குகளுக்கு எதிராக மனிதர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக,  அன்னாசி பழத்தில் வெடி வைத்து, கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  அதனை தொடர்ந்து, சிறுத்தை, மாடு மற்றும் நாய் என விலங்குகளுக்கு சித்திரவதைகள் தொடர்ந்த நிலையில், தற்போது … Read more