#Breaking : இன்று இரவு ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்.!

அனைத்து பகுதிகளும் ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என அனைத்து ஆம்னி பேருத்து சங்கம் அறிவித்துள்ளது. 

மாண்டஸ் புயல் இன்றிரவு கரையை கடக்கும் என்பதால் வடதமிழகத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று 6 மாவட்டங்களில் இரவு நேர பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

தற்போது அந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதில் சென்னையை ஒட்டியுள்ள கடற்கரை சாலையில் மட்டுமே இன்று இரவு நேர பேருந்து சேவை நிருதப்பட்டுள்ளது. மற்றபடி, சென்னை உள்பட எந்த மாவட்டத்திலும் இரவு நேர பேருந்து சேவை நிறுத்தப்படாது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ள்ளது. எந்த இடத்தில் புயலின் தாக்கம் இருக்கிறதோ அங்கு மட்டுமே பேருந்து சேவை நிறுத்தப்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே பல, இன்று இரவு சென்னை உட்பட அனைத்து பகுதிகளும் ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என அனைத்து ஆம்னி பேருத்து சங்க முக்கிய நிர்வாகி அன்பழகன் தெரிவித்துள்ள்ளார்.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment