ஒடிசா : விழாவில் விருந்து சாப்பிட்ட 40 பேர் உணவு விஷமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதி …!

ஒடிசாவில் உள்ள பத்ரக் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் விருந்து போடப்பட்டுள்ளது. இந்த விருந்தில் போடப்பட்ட உணவை சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டோர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்களது உணவு விஷமாகியதன் காரணமாக தான் இவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal