ஹேப்பி நியூஸ்.! கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் ரத்து.!

ஒடிசா மாநிலத்தில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புக்கான இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், கொரோனா முன்னெச்சரிக்கையாககல்வி நிலையங்கள் திறக்கப்படாமல் இருந்து வந்ததால், பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்கள் ஆண்டு இறுதி தேர்வுகளை எழுத முடியாமல் தவித்து வந்தனர்.

பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கிற்கு பின் நடக்கவிருந்த பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.  

தற்போது ஒடிசா மாநிலத்தில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புக்கான இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.