கொரோனா பரிசோதனை செய்துகொண்டாலே 14 நாட்கள் தனிமை.! வெளியான அதிரடி உத்தரவு.!

பி.சி.ஆர் சோதனை செய்துகொண்டாலே பரிசோதனை செய்துகொண்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தார் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் – சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. அதிலும், குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது சென்னையில் இருந்து வெளியேற யாருக்கும் இ-பாஸ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது சென்னையில் கொரோனா பரிசோதனையான பி.சி.ஆர் சோதனை செய்துகொண்டாலே பரிசோதனை செய்துகொண்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தார் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், பரிசோதனை செய்துகொண்டவர் தான் 14 நாட்களாக தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களையும் கொடுக்கவேண்டும். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.