ஓசி பேருந்து – யாருடைய மனதும் புண்படும்படி பேசியிருந்தால் வருந்துகிறேன் – அமைச்சர் பொன்முடி

ஓசி பேருந்து என கூறியதற்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் பொன்முடி.

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அமைச்சர் பொன்முடி, ஓசி பேருந்து என பேசியிருந்தது கடும் சர்ச்சையானது. இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஓசி பேருந்து என கூறியதற்கு அமைச்சர் பொன்முடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சென்னையில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவானது வியர்வைக்கு வெகுமதி என்ற தலைப்பில் நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி வாயா போயா என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு கூட தற்போது பயமாக உள்ளது. தலைவர் என்னை பார்த்து இதுபோன்று பேச வேண்டாம் தெரிவித்துள்ளார்.

சகஜமாக பேசிய வார்த்தையை வைத்து அரசியல் செய்கிறார்கள். உண்மையில் யாருடைய மனதாவது புண்படும்படி பேசி இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக டார்கெட் செய்து தாக்கி கொண்டிருக்கிறார்கள். தளபதி ஆட்சியில் வேறு எதை வைத்து அரசியல் செய்ய முடியும். ஒரு வார்த்தையை பிடித்து கொண்டு அரசியல் செய்கிறார்கள்என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment