சங்பரிவார் சதி திட்டத்தை ஓபிசி மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் – திருமாவளவன்

அநீதியை எதிர்த்து தீவிரமாக களமாட வேண்டிய பொறுப்பு ஓபிசியினருக்கு உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பில் 10% இட ஒதுக்கீடு செல்லும் என 3 நீதிபதிகள் ஆதரவாகவும், தலைமை நீதிபதி உள்ளிட்ட இருவர் 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் தீர்ப்பு வழங்கினர். பெரும்பான்மை நீதிபதிகள் சரி என்றதால் 10% இடஒதுக்கீடு உறுதியானது.

இதுகுறித்து திருமாவளவன் அவர்கள், ஓபிசி விரோத சதிச்செயலில் உருவானதுதான் பொருளாதார அளவுகோலில் இடஒதுக்கீட்டு சட்டம்; அநீதியை எதிர்த்து தீவிரமாக களமாட வேண்டிய பொறுப்பு ஓபிசியினருக்கு உள்ளது. சங்பரிவார் சதி திட்டத்தை ஓபிசி மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment