இனிமேல் நான் சினிமாவில் நடிப்பது கடவுளின் கையில் தான் இருக்கிறது : நகைசுவை நடிகர் வடிவேலு

தமிழ் சினிமாவின் நகைசுவை நடிகர் என்ற பெருமை வடிவேலுவை மட்டுமே சாரும். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நேசமணி கேரக்டெர் குறித்து நடிகர் வடிவேலு பேட்டியளித்துள்ளார்.
இந்த பேட்டியில் அவர் கூறியதாவது, நான் வாழக் கூடாது. என்னை சாகடிக்க வேண்டும் என்று என்னை அழிப்பதற்கு, தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்து விட்டார்கள் என்றும், ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அதை பற்றி நான் கவலைப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சினிமாவில் எனக்கு கிடைத்த இடைவெளி வரப்பிரசாதம் என்றும், ஒருவழியாக எனது வாழ்க்கையை செட்டில் செய்துவிட்டேன். இனிமேல் நான் சினிமாவில் நடிப்பது கடவுளின் கையில் தான் இருக்கிறது என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment