விமானங்களில் தமிழில் அறிவிப்பு – மத்திய அரசு ஒப்புதல்.!

  • சென்னை வரும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • அமைச்சர் பாண்டியராஜனுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை வரும் அனைத்து பயணிகள் விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் பாண்டியராஜனுக்கு மத்திய விமான போக்குவரத்துதுறை அமைச்சர் மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் தமிழில் அறிவிப்பு வெளியிட விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் சிங்கப்பூரின் ஸ்கூட் விமானத்தில் துணை விமானியாக பணி செய்த சரவணன் அய்யாவு என்பவர் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு செல்லும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்தார். அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Image

author avatar
murugan