என் தாய் மொழி தான் உயர்ந்தது என எவரும் நினைக்க கூடாது : நடிகை பிரியா ஆனந்த்

நடிகை பிரியா ஆனந்த் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் வாமனன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு,இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சுமோ படத்தில் நடித்து வருகிறார்.
இவர் பல மொழிகளில் திரைப்படங்களில் நடிப்பது குறித்து கூறுகையில், ‘என் தன்ஹய் மராத்தியர். தாய் தெலுங்கர். எனக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, வங்காளம், மராத்தி ஆகிய மொழிகள் நன்கு தெரியும். என் தாயமொழி தான் உயர்ந்தது என எவரும் நினைக்க கூடாது. அவரவருக்கு அவரவர் தாயமொழி தான் முக்கியம். எத்தனை மொழிகளை கூடுதலாக கற்றாலும் நல்லது தான்.’ என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.