யாரும் என்னை கவனிக்கவில்லை! விரக்தியில் வீடு திரும்பிய கொரோனாநோயாளி!

விரக்தியில் வீடு திரும்பிய கொரோனாநோயாளி.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதுவரை இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால், 937,487 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  24,315 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கானாவில், ஆதர்ஷ் நகர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்த கொரோனா தொற்று உடைய நபரை, யாரும் கவனிக்காமல் அலட்சியம் செய்துள்ளன. இதனையடுத்து, விரக்தியடைந்த அவர்,  மீண்டும் தனது வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.

மருத்துவமனை ஊழியர்கள், அவரை காணாமல் பதறிய நிலையில், அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். தாம் வீட்டுக்குச் செல்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து, மீண்டும் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.