தமிழக அரசின் சார்பில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் புதிய உழவன் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த உழவன் ஆப் வசதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் 2018-2019 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டின் போது துணை முதல்வர், நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் அறிவித்ததன் படி இந்த புதிய உழவன் ஆப் நேற்று விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
குறிப்பாக அனைத்து விவசாயிகளுக்கும் இந்த ஆப் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உழவன் மொபைல் ஆப் பொறுத்தவரை வேளாண்மை திட்டங்களின் மானிய விவரங்கள், பயிர் காப்பீடு விவரங்கள் குறித்து விவசாயிகளுக்கு நேரடியாக அறிவிக்கப்படும். மேலும் டிராக்டர்,பவர் டில்லர் மற்றும் நிழல் வலைக்குடில், பசுமைக்குடில் போன்றவற்றிர்கான மானியம் பெற முன்பதிவு செய்ய முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பேருந்து நிலையங்கள், வணிக வளாங்கள் போன்ற பல்வேறு இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்சமயம் சென்னை திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இச்சேவையானது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் வாயிலாக பொதுமக்கள் ஒரு நாளை 20 நிமிடங்கள் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…
IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…
Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…