சந்திராயன்-2 எடுத்திருந்த நிலவின் புதிய புகைப்படம் வெளியீடு!

இஸ்ரோ முதலில் சந்திராயன் 2 விண்கலத்தை ஜூலை 15 ஆம் தேதி  விண்ணில் ஏவப்படும் என முதலில் தெரிவித்தது. ஆனால், தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்நிகழ்வு  ஒத்திவைக்கப்பட்டது.  இதனையடுத்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி மையத்தில் இருந்து  சந்திராயன் 2 விண்கலம்  ஜூலை  22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

நிலவை சுற்றிவரும் சந்திராயன் 2 விண்கலம் நிலவின் புகைப்படத்தை 2650 கி.மீ. தூரத்தில் இருந்து நிலவை புகைப்படம் எடுத்து ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் அடுத்ததாக 4375 கிமீ தூரத்தில் இருந்து நிலவின் புதிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ தனது த்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.