புதிய ஓட்டுனர் உரிமம் நிறுத்தி வைப்பு – எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவிப்பு.!

இந்தியாவில் கொடூரன் கொரோனா வைரசால் நேற்று வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக உள்ளது.இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு  பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதையெடுத்து சென்னையில் நேற்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பின் போது வெளிமாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளை இங்கு தூய்மைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளை அங்கு தூய்மைப்படுத்த ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மேலும் வருகின்ற 31-ம் தேதி வரை ஆர்.டி.ஒ. அலுவலகங்களில் புதிதாக ஓட்டுனர் உரிமம் வழங்குவது தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால்  ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கும் பணிகள் மட்டும் வழக்கம் போல நடைபெறும் என கூறினார்.

author avatar
murugan