மீண்டும் திரைக்கு வரவுள்ள நயன்தாராவின் கொலையுதிர் காலம்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வருபவர் நடிகை நயன்தாரா.இவர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெருவிதமாக கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் பல படங்கள் வெளியாக உள்ளன.இதில் கொலையுதிர் காலம் படம் கடந்த மாதமே வெளியாக இருந்தது பின் சில பிரச்சனைகளால் இந்த படத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இதனை தொடர்ந்து இன்று நீதிமன்றம் இந்த படத்திற்கு தடையை நீக்கியுள்ளது.இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மேலும் இந்த படம் திரைக்கு வரும் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.