தேசிய பாதுகாப்பு சட்டம் – திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேற்றம்!

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இருக்கும் சட்டமான தேசிய பாதுகாப்பு சட்டம் சில திருத்தங்களுடன் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம் சாமானிய மக்களின் கருத்துக்களை நசுக்கும் வைகையில் இருப்பதாகவும், அப்பாவி மக்களும் தண்டிக்க படுவார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்து இருந்தனர். எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பெறும்பான்மை எண்ணிக்கையில் இந்த சட்டம் நிறைவேற்ற பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், இந்த சட்டமானது பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியாக கடும் தண்டனை எடுக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதிகளுக்கு உதவி செய்வபவர்களும் பயங்கரவாதிகள் தான்  என்று கூறியுள்ளார்.