நாசா பூமியை நோக்கி வரும் விண்கல்லை அழிக்க திட்டம்!

நாசா விஞ்ஞானிகள்  பூமியை நோக்கி விழும் விண்கல்லால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க அணு ஆயுதத்தை ஏவி அதனை அழிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக வல்லுனர் குழு ஒன்று தீவிரமாக ஆலோசித்து என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி வந்துக் கொண்டிருக்கும் விண்கல்லை வழிமறித்து அதனை சிறிய துண்டுகளாக சிதறடிப்பதா அல்லது அணு ஆயுதத்தை ஏவி முழுவதுமாக அழித்து விடுவதா என்று ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து அணு ஆயுதத்தைப் பயன்படுத்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பென்னு( bennu) என்ற அந்த விண்கல் 174 பில்லியன் பவுண்ட் எடை கொண்டது. அது பூமியைத் தாக்கினால், இதுவரை சோதிக்கப்பட்ட மிகப்பெரிய ஹைட்ரஜன் வெடிகுண்டை விட 20 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. இந்த விண்கல் 2135ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி பூமியை அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment