நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீடிப்பு..!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்தார் நளினியின் பரோல் கடந்த மாதம் நீட்டிக்கப்பட்டது. 

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு மேலும் மாதம் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. நாளையுடன்  பரோல் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒருமாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  கடந்த டிசம்பர் 27-ம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி வேலூர் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி அவரது தாயார் பத்மாவின் உடல் நிலையை காரணம் காட்டி 30 நாள் பரோலில் கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி வெளியே வந்தார். இதற்கிடையில் நளினிக்கு 2-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

author avatar
murugan