#BREAKING :என் கோபம் பாஜகவை விட்டு செல்பவர்களுக்கு எதிரானது..நயினார் நாகேந்திரன்.!

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, பாரதிய ஜனதா கட்சியில் தாம் மனவருத்தத்தில் இருப்பதாகவும், கட்சித் தலைமை மீது வருத்தத்தில் இருந்தாலும் தான் கட்சி மாறப்போவதில்லை என்று மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். இந்த செய்தி பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மத்தியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நண்பர்களே என் கருத்தை தெளிவாக படிக்கவும். என் கோபம் பாஜக வை விட்டு செல்பவர்களுக்கு எதிரானது. வருத்தம் உள்ளதா என்று கேட்டால் நிச்சயம் உண்டு என்று சொல்வேன். கட்சி தலைமையின் கொள்கையையும், தொலைநோக்கு பார்வையையும் , உழைப்பை அங்கீகரிக்கும் மாண்பையும் அறியாத அவசரக்குடுக்கைகளை கண்டு ஒவ்வொரு பாஜக காரனுக்கும் ஏற்படும் நியாயமான கோபமும் வருத்தமும் எனக்கும் உண்டு என கூறினார்.

author avatar
murugan