#IPL2020: சிறப்பாக விளையாடிய சூர்யகுமார்.! மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.!

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில்  மும்பை அணி 5 விக்கெட்டுகள்  வித்தியாசத்தில் வெற்றிபெற்றது .

ஐபிஎல் தொடரின் 48- வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது . இந்த போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட்  பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில்  களமிறங்கிய பெங்களுர் அணி 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே அடித்தது.  165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை  அணி களமிறங்கியது.

மும்பை அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், டி காக் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே 18 ரன்கள் எடுத்து டி காக் வெளியேறினார். இதைதொடர்ந்து, இஷான் கிஷன் 25 ரன்கள், திவாரி 8 ரன்கள்,க்ருனால் 10 ரன்கள்,ஹர்டிக் 15 ரன்கள்எடுத்து வெளியேறினார்கள்.

சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் கடைசி வரை களத்தில் நின்று 79  ரன்கள் அடித்தார். இறுதியாக மும்பை அணி 19.1 ஓவர்களில்   5 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களுர் அணியின் பந்துவீச்சில் சிராஜ் ,சாகல் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இந்த வெற்றி மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதல்  இடத்தில் உள்ளது.