வானில் தெரிந்த நகரும் மர்ம விளக்குகள்.!

கடந்த திங்கள் கிழமை இரவு வானில் மர்மமான விளக்குகள் தோன்றியது. இந்த விளக்குகளை கான்பூர், லக்னோ, மற்றும் பல உத்தர பிரதேச நகரங்களில் உள்ள சில பகுதிகளில் இருக்கும் மக்கள் பார்த்து குழப்பம் அடைந்துள்ளனர்.

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த பகுதிகளில் இருக்கும்  மக்கள் தங்களுடைய சமூக வலைதளபக்கங்களில் பகிர்ந்து கொண்டனர். விளக்குகளின் புள்ளி இடப்பட்ட பாதை ரயில் போல நகர்வதாகவும் கூறினார்கள்.

அவை UFO (Unidentified Flying Object) எனும் கண்டறியப்படாத பறக்கும் பொருள்களாக  இருக்கலாம் என்றும், மற்றவர்கள் இது மர்மமானது என்று நினைத்து “கடவுளின் செயல்” என்றும் டிவிட்டரில் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

மேலும் ஒருவர்  நாசா, இஸ்ரோ ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் உத்தரபிரதேச அரசாங்கத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை ஆகியவற்றை டேக் செய்து   விளக்குகள் தொடர்பான கேள்வியை கேட்டுள்ளார்.  ஆனால், இது சமீபத்தில் ஏவப்பட்ட செயற்கைக்கோளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

author avatar
Muthu Kumar

Leave a Comment