லக்னோ சிறையில் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட கைதிகள் எண்ணிக்கை 63 ஆக உயர்வு
லக்னோ மாவட்ட சிறையில் ஏற்கனவே 27 பேருக்கு எச்.ஐ.வி (HIV) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த டிசம்பரில் எடுத்த பரிசோதனையை அடுத்து மேலும் 36 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பரில், உத்தரபிரதேச மாநில சுகாதாரத் துறையால் நடத்தப்பட்ட பரிசோதனையை தொடர்ந்து நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செப்டம்பரிலிருந்து எச்.ஐ.வி பரிசோதனைக் கருவிகள் கிடைக்காததே சோதனை தாமதமானதற்குக் காரணமாக அமைந்தது. பாதிக்கப்பட்ட … Read more