பாஜக வேட்பளர் திடீர் விலகல்.. புதிய வேட்பாளரை நியமித்த கட்சி தலைமை!

Satyadev Pachauri

Satyadev Pachauri: மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் பாஜக எம்பி சத்யதேவ் பச்செளரி திடீரென விலகினார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக தேசிய கட்சிகள் உட்பட அனைத்து மாநில கட்சிகளிலும் ஆயுதமாகி வருகின்றனர். அதன்படி, கூட்டணி, பங்கீட்டை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், பாஜக இதுவரை 5 கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த சூழலில், … Read more

8 மீட்டர் சுரங்கம் தோண்டி வங்கியில் கொள்ளையடித்த திருட்டு கும்பல்.! 1.8 கிலோ தங்கம் மாயம்.!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் எஸ்பிஐ வங்கியில் சுரங்கம் தோண்டி 1.8 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று (வெள்ளிக்கிழமை) எஸ்பிஐ வங்கியில் 1.8 கிலோ தங்க நகைகளை ஒரு கும்பல் கொள்ளையடித்துள்ளது. இதற்காக அந்த கும்பல் வங்கிக்கு அருகே சுமார் 10 அடிக்கு சுரங்கம் தூண்டியுள்ளது. 8 மீட்டர் நீளமுள்ள சுரங்கம் தோண்டி அதன் மூலம் வங்கிக்குள் நுழைந்த மர்ம கும்பல் அங்கு லாக்கரில் இருந்த 1.8கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதன் … Read more

#shocking: 18 மாதங்களாக இறந்தவரின் உடலை பாதுகாத்த குடும்பத்தினர்..

கோமாவில் இருப்பதாக நினைத்து 18 மாதங்களாக இறந்தவரின் சடலத்தை குடும்பத்தினர் பாதுகாத்து வீட்டில் வைத்துள்ளனர். கான்பூரில் வருமான வரித்துறை ஊழியர் ஒருவரின் குடும்பத்தினர், அவர் கோமா நிலையில் இருப்பதாகக் கருதி அவரது இறந்த உடலை கான்பூரில் உள்ள வீட்டில் கிட்டத்தட்ட 18 மாதங்கள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர் கோமாவிலிருந்து வெளியே வருவார் என்ற நம்பிக்கையில் அவரது மனைவி தினமும் அவர் மீது ‘கங்காஜல்’ தெளிப்பார் என்று கூறினர். ஆனால் வருமான வரித்துறை … Read more

வானில் தெரிந்த நகரும் மர்ம விளக்குகள்.!

கடந்த திங்கள் கிழமை இரவு வானில் மர்மமான விளக்குகள் தோன்றியது. இந்த விளக்குகளை கான்பூர், லக்னோ, மற்றும் பல உத்தர பிரதேச நகரங்களில் உள்ள சில பகுதிகளில் இருக்கும் மக்கள் பார்த்து குழப்பம் அடைந்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அந்த பகுதிகளில் இருக்கும்  மக்கள் தங்களுடைய சமூக வலைதளபக்கங்களில் பகிர்ந்து கொண்டனர். விளக்குகளின் புள்ளி இடப்பட்ட பாதை ரயில் போல நகர்வதாகவும் கூறினார்கள். அவை UFO (Unidentified Flying Object) எனும் கண்டறியப்படாத பறக்கும் … Read more

கான்பூரில் சாலை விபத்தில் சிறுத்தை பலி..!

கான்பூரின் புதிய சௌக் பிரதாப்பூர் கிராமத்தின் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வயல்களில் சிறுத்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுத்தையின் உடலை பார்த்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து  வந்தனர். வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கான்பூரின் மாவட்ட வன அதிகாரி கூறுகையில் “இது ஆண் சிறுத்தை ,4 வயது இருக்கலாம் என்றும் இது வாகனம் மோதியதில் தலையில் காயம் ஏற்பட்டு … Read more

பிரதமரின் கான்பூர் பயணம் -பிரதமர் அலுவலகம் அறிவிப்பு..!

பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 28 ஆம் தேதி கான்பூருக்குச் செல்கிறார் என பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுவதற்காகவும், கான்பூர் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் பினா-பாங்கி மல்டிபுராடக்ட் பைப்லைன் திட்டத்தையும் திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 28 ஆம் தேதி கான்பூருக்குச் செல்கிறார் என பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. PM Narendra Modi … Read more

கான்பூர் சென்றடைந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் …!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் சுற்றுப்பயணமாக உத்தர பிரதேசத்திற்கு சென்றடைந்துள்ளார்.  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்றும், நாளையும் உத்தர பிரதேசம் செல்ல உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்பொழுது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் கான்பூர் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார். அவரை உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றுள்ளனர். சவுத்ரி ஹர்மோகன் சிங் யாதவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் … Read more

உத்தரப்பிரதேச மாநில பேருந்து விபத்தில் 1 வயது குழந்தை உட்பட 3 பேர் பலி..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 1 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரிலிருந்து நேற்று இரவு 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று ஆக்ரா நோக்கி சென்றுள்ளது. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்துள்ளது. அந்த பேருந்து எதிர்பாராத விதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஓம்வீர் சிங் தெரிவித்துள்ளதாவது, சாலை ஓரத்தில் … Read more

ரூ.5 லட்ச மதிப்புள்ள தங்கமாஸ்க் அணிந்து வலம் வரும் மனிதர்..!

உத்தரபிரதேசத்தில் ரூ.5 லட்ச மதிப்புள்ள தங்க மாஸ்க்கை அணிந்து வலம் வருகிறார் மனோஜ் ஆனந்த் என்பவர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து காத்துக்கொள்ள தடுப்பு நடவடிக்கைகளாக முகக்கவசம் அணிவது, கைகளை சோப்பு போட்டு கழுவுவது, தனி மனித இடைவெளியை பின்பற்றுவது ஆகியவை குறிப்பிடத்தக்கது. இதனால் முகக்கவசம் என்பது மக்களுக்கு முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அதன்படி, உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மனோஜ் ஆனந்த் என்பவர் தங்கத்தால் ஆன முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லும் பொழுது பயன்படுத்துகிறார். … Read more

விகாஸ் துபேயின் என்கவுண்டர் வழக்கு: விரைவில் கைது செய்யப்படும் விகாஸ் துபேயின் மனைவி.!

விகாஸ் துபேயின் என்கவுண்டர் வழக்கில் போலி ஐடியில் சிம் பயன்படுத்திய விகாஸ் துபேயின் மனைவி ரிச்சா துபே விரைவில் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தின் கான்பூரை சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபே சமீபத்தில் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். அதனையடுத்து விகாஸ் துபேயின் குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகள் மீது நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. அந்த விசாரணையில் விகாஸ் துபேயின் மனைவி மற்றும் உறவினர்கள் போலி ஆவணங்களின் கீழ் … Read more