அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுகவினர் அஞ்சலி

தமிழகத்தில் மக்களவை தேர்தலும், 22 சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று முடிவடைந்து முடிவுகளும் வெளியாகிவிட்டது. இந்த இரு தேர்தலில்களிலும் திமுக மாபெரும் வெற்றியை நிகழ்த்தியுள்ளது. இதனால் திமுக தொடர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனால் திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.அவருடன் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், கனிமொழி,மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களும்  மரியாதை செலுத்தினார்கள்.

 

Leave a Comment