ஏலத்தில் விடப்படவுள்ள பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1200-க்கும் மேற்பட்ட பரிசு பொருட்கள்..!

வரும் 17-ஆம் தேதி 4-வது முறையாக ஆன்லைன் மூலமாக பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, அவர் எங்கு சென்றாலும் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பரிசுகளை வழங்குவது உண்டு. அந்த வகையில், பிரதமர் மோடி அவர்கள் பெற்ற 1,200-க்கு மேற்பட்ட பரிசு பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன.

ஏற்கனவே 3 தடவை ஆன்லைன் மூலம் ஏலம் நடந்துள்ள நிலையில், வரும் 17-ஆம் தேதி 4-வது முறையாக ஆன்லைன் மூலமாக பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது. வரும் 17-ஆம் தேதி தொடங்கும் ஏலம், அக்டோபர் 2-ஆம்  தேதி  முடிவடைகிறது. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணம், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த ஏலத்தில், அரசியல் பிரபலங்கள் அளித்த பரிசுகள் உட்பட, டி-சர்ட், குத்துச்சண்டை கையுறைகள், ஈட்டி, பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் கையெழுத்திட்ட டென்னிஸ் மட்டை உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள், ஓவியங்கள், சிற்பங்கள், கைவினை பொருட்கள், பாரம்பரிய அங்கவஸ்திரம், சால்வை, தலைப்பாகை, வாள் ஆகியவையும் ஏலத்தில் விடப்பட உள்ளது. பரிசு பொருட்களின் ஆரம்ப விலை ரூ.100 முதல் ரூ.10 லட்சம்வரை ஏலத்தில் விடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment