அமைதி நிலவும் வகையில் ஆட்சி சக்கரத்தை மோடி சுழற்ற வேண்டும்- வைகோ

இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், நாடு முழுவதும் அமைதி நிலவும் வகையில் ஆட்சி சக்கரத்தை மோடி சுழற்ற வேண்டும். மத்திய பிரதேசம், குஜராத்தில் நிகழ்ந்த வன்கொடுமைகள் அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. சிறுபான்மை மக்கள், பழங்குடியின மக்கள் நலனை பாதுகாத்து, மதநல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்று  வைகோ தெரிவித்துள்ளார்.

Leave a Comment