மோடி பதவி ஏற்றத்தில் இருந்து தன்னை எதிர்ப்பவர்களை மிரட்டி பார்க்கிறார்-கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், மோடி பதவி ஏற்றத்தில் இருந்து தன்னை எதிர்ப்பவர்களை மிரட்டி பார்க்கிறார், அது போல தான் பா. சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்புவதெல்லாம் .மடியில் கனம் இருந்தல் தான் நாங்கள் பயப்பட வேண்டும்,அதனால் எல்லாவற்றையும் சட்டப்படி சந்திப்போம்.

மோடியை பாராட்டுவதலேயே அவர் ஆதரவாக மாறிவிடுவார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. சிதம்பரம் என்றைக்கும் தடம் மாறா மாட்டார். எடுத்துக் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பார் என்று தெரிவித்தார்.