இண்டிகோ விமானத்தில் நடுவானில் தீப்பிடித்த பயணியின் மொபைல் …!

திருப்ருகரிலிருந்து டெல்லிக்கு சென்ற இண்டிகோ விமானம் ஒன்றில் இருந்த பயணி ஒருவரின் மொபைல் திடீரென்று தீ பிடித்துள்ளது. இதனை கவனித்த விமானப் பணியாளர் உடனடியாக தீயை அணைக்கும் கருவி மூலம் அதனை அணைத்துள்ளார்.

இதனால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மதியம் 12.45 மணியளவில் பத்திரமாக தரையிறங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

author avatar
Rebekal