டெல்லியில் திமுக அலுவலகத்தை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின்..!

டெல்லியில் திமுக அலுவலகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். அண்ணா- கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அண்ணா- கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் சோனியா காந்தி, பா.சிதம்பரம், வைகோ, பரூக் அப்துல்லா, டி ராஜா, திருநாவுக்கரசர், கபில் சிபில் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், தமிழக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தில் கட்சிக் கொடியை முதலமைச்சர் மு.கஸ்டாலின் ஏற்றி வைத்தார். டெல்லி திமுக அலுவலகத்தில் குத்துவிளக்கை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்றி வைத்தார்.

டெல்லி அண்ணா -கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா சிலையை துரைமுருகனும், கலைஞர் சிலையை டி.ஆர்.பாலு திறந்து வைத்தனர். பேராசிரியர் அன்பழகன் நூலகத்தை சோனியா காந்தி திறந்துவைத்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கினார்.

author avatar
murugan