இந்த மாநிலத்தில் மட்டும் வரும் கல்வியாண்டில் பாதி கல்வி கட்டணம் செலுத்தினால் போதும்.!

மிசோராமில் தனியார் பள்ளிகள் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.  

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் , பொதுமக்கள் தங்கள் அன்றாட வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், வரும் கல்வியாண்டில் பெரும்பாலானவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்த மிகவும் சிரமப்படும் சூழல் உருவாகும். 

இதனை கருத்தில் கொண்டு மிசோராம் மாநில கல்வி அமைச்சர் லால்சந்தமா ரால்டே தலைமையில் மிசோரம் பள்ளிகள் சங்கம் மற்றும் மாணவர் அமைப்பினர்களிடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனை கூட்டத்தில் தனியார் பள்ளிகட்டணம் 50 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும், மேலும், மிகவும் ஏழ்மை நிலையில் பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை முழுமையாக ரத்து செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.