MIWvsRCBW : முதல் இன்னிங்ஸ் முடிவில் பெங்களூர் அணி 155 ரன்கள் குவிப்பு..!

மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 155 ரன்கள் குவித்துள்ளது.

இந்த ஆண்டு அறிமுகமான மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரின் 4வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 அவர்களின் ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 28 ரன்களும், ஸ்மிருதி மந்தனா மற்றும் ஸ்ரேயங்கா பாட்டீல் 23 ரன்களும், கனிகா அஹுஜா 22 ரன்களும், மேகன் ஷட் 20 ரன்களும் குவித்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹெய்லி மேத்யூஸ் 3 விக்கெட்டுகளும், சைகா இஷாக் மற்றும் அமெலியா கெர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற 155 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment