காணமல் போன இளம்பெண்!

திருமங்கலம்:ராம் இவர் திருமங்கலம் அருகேயுள்ள முத்தப்பன்பட்டியைச் சேர்ந்தவர் . இவர் ஒடிசா மாநிலத்தில் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் பிளஸ் 2 முடித்துள்ள இவர் தாயுடன் முத்தப்பன்பட்டியில் வசித்து வந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மதுரை செல்வதாக தாயிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். 9 பவுன் நகை அணிந்திருந்த அவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இந்நிலையில் தந்தை ராம் கொடுத்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் அதனை பற்றி  விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment