சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். 

சிவகங்கை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

அப்போது திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் உள்ள அரசு தொடக்கபள்ளியில் உதயநிதி ஸ்டாலின் சென்று காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்தார். மேலும், அவரே, மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கினார்.

மேலும், கல்வி அதிகாரிகளிடம் பள்ளி செயல்பாடு குறித்தும் , நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார் அமைச்சர் உதயநித்திஷ் ஸ்டாலின்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment