மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம்..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று இரவு 8 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் ஹிங்கோலி என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது இந்த பகுதியிலிருந்து 77 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

மேலும், இது பூமியின் அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம்  கொண்டு இருந்துள்ளது. அதேபோல், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.